374. துல்கர்னைன் நபியா?

 

இவ்வசனத்தில் (18:98) துல்கர்னைன் என்ற மன்னரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. இவர் இறைத்தூதரா? இறைத்தூதராக இல்லாத நல்ல மனிதரா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

 

யஃஜூஜ், மஃஜூஜ் எனும் கூட்டத்தினருக்கும், மக்களுக்கும் மத்தியில் தடுப்பை ஏற்படுத்திய துல்கர்னைன், இத்தடுப்பு யுகமுடிவு நாள் வரை நிலைத்திருக்கும் எனவும், யுகமுடிவு நாள் ஏற்படும்போது தடுப்பு தூள்தூளாக்கப்பட்டு யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் வெளியே வருவார்கள் என்றும் கூறியதாக இவ்வசனம் கூறுகிறது.

 

இவ்வாறு இறைத்தூதரால் தான் கூற முடியும். எனவே துல்கர்னைன் இறைத்தூதர் என்று கூறும் அறிஞர்கள் இவ்வசனத்தை அதற்குச் சான்றாகக் கொள்கின்றனர்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 52186