Tamil Quran தமிழ் குர்ஆன் - அல் ஃபீல்- யானை -அத்தியாயம் :105-www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
105. அல் ஃபீல்
யானை
மொத்த வசனங்கள் : 5
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் யானை என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
105:1 اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِيْلِؕ
105:1. யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?
105:2 اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِىْ تَضْلِيْلٍۙ
105:2. அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா?
464
105:3 وَّاَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا اَبَابِيْلَۙ
105:3. அவர்களுக்கு எதிராகப் பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான்.
105:4 تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّيْلٍۙ
105:4. சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின.
105:5 فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّاْكُوْلٍ
105:5. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.
355