456. இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா?

 

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்று இவ்வசனங்கள் (3:55, 4:156) கூறுகின்றன.

 

ஈஸா நபி எனும் ஏசுவைக் குறித்து இஸ்லாத்தின் நம்பிக்கையும், கிறித்தவர்களின் நம்பிக்கையும் பல விஷயங்களில் வேறுபடுகின்றன.

 

இயேசுவை யூதர்கள் கொல்ல முயற்சித்ததை இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக வேறொருவரைத்தான் கொலை செய்தார்கள். இயேசு இறைவனால் உயிருடன் உயர்த்தப்பட்டார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

 

எந்த மனிதரும் மரணித்தே ஆகவேண்டும்; பூமியில் அடக்கம் செய்யப்பட்டே ஆக வேண்டும் என்ற இறைவனின் விதிக்கு ஏற்ப இயேசு இறுதிக் காலத்தில் பூமிக்கு அனுப்பப்பட்டு மரணிப்பார் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கையாகும்.

 

இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதாகவும், பின்னர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததாகவும் கிறித்தவர்கள் நம்புவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

 

பைபிள் ஆதாரத்தின்படி பார்த்தாலும் இஸ்லாம் சொல்லக் கூடிய கருத்துக்குத் தான் வலுவான ஆதாரம் உள்ளது.

 

இயேசுவின் வரலாற்றை எழுதிய மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் ஆகிய நால்வரும் இயேசுவின் நேரடிச் சீடர்கள் அல்லர். கேள்விப்பட்டதைத்தான் அவர்கள் எழுதினார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக எழுதிய இவர்கள் அதைக் கண்ணால் கண்டவர்களல்லர்.

 

இயேசுவின் நேரடிச் சீடராக பர்னபா என்பவர் திகழ்ந்தார். அவர் இயேசு பிடிபடும்போது உடன் இருந்தவர். அவர் எழுதிய சுவிசேஷம் இஸ்லாம் கூறுவது போலவே இந்த நிகழ்வைச் சொல்கிறது. இதன் காரணமாக கிறித்தவ மதகுருமார்கள் பர்னபா சுவிசேஷத்தை நீக்கி விட்டனர்.

 

பர்னபா பற்றி பைபிளில் காணப்படும் குறிப்புகள் அவரது முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

 

பார்க்க: அப்போஸ்தலர் நடபடிகள் 9:27, 11:21-26, 13:1,2, 13:7, 13:43, 13:44-47, 15:37, 15:38-41,

 

மேலும் பார்க்க : கலாத்தியர் 2:1, 2:9,10

 

பர்னபா என்பவரின் முக்கியத்துவத்தை பவுலடிகளாலும் மறுக்க முடியவில்லை என்பதை மேற்கண்ட வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

 

பவுலுக்கு நிகராகவும், அவரை விட மேலாகவும் இருந்த பர்னபா எழுதிய சுவிஷேசத்தில் சிலுவை மரணம் குறித்து பின்வருமாறு கூறுகிறார்.

 

215. When the soldiers with Judas drew near to the place where Jesus was, Jesus heard the approach of many people, wherefore in fear he withdrew into the house. And the eleven were sleeping.

 

Then God, seeing the danger of his servant, commanded Gabriel, Michael, Rafael, and Uriel, his ministers, to take Jesus out of the world.

 

The holy angels came and took Jesus out by the window that looketh toward the South. They bare him and placed him in the third heaven in the company of angels blessing God for evermore.

 

216. Judas entered impetuously before all into the chamber whence Jesus had been taken up. And the disciples were sleeping. Whereupon the wonderful God acted wonderfully, insomuch that Judas was so changed in speech and in face to be like Jesus that we believed him to be Jesus. And he, having awakened us, was seeking where the Master was. Whereupon we marvelled, and answered: 'Thou, Lord, art our master; hast thou now forgotten us?'

 

And he, smiling, said: 'Now are ye foolish, that know not me to be Judas Iscariot!'

 

And as he was saying this the soldiery entered, and laid their hands upon Judas, because he was in every way like to Jesus.

 

We having heard Judas' saying, and seeing the multitude of soldiers, fled as beside ourselves.

 

And John, who was wrapped in a linen cloth, awoke and fled, and when a soldier seized him by the linen cloth he left the linen cloth and fled naked. For God heard the prayer of Jesus, and saved the eleven from evil.

 

217. The soldiers took Judas and bound him, not without derision. For he truthfully denied that he was Jesus; and the soldiers, mocking him, said: 'Sir, fear not, for we are come to make thee king of Israel, and we have bound thee because we know that thou dost refuse the kingdom.'

 

Judas answered: 'Now have ye lost your senses! Ye are come to take Jesus of Nazareth, with arms and lanterns as [against] a robber; and ye have bound me that have guided you, to make me king!'

 

215. இயேசு நின்ற இடத்திற்கு அருகே யூதாசும், படையாளிகளும் வந்தடைந்தபோது இயேசு ஜனங்களின் ஆரவாரத்தைக் கேட்டார். வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார். பயத்தின் காரணமாக அவர் வீட்டிற்குள் பின்வாங்கிச் சென்றார். பதினொரு அப்போஸ்தலர்களும் அப்போது நித்திரையிலிருந்தனர்.

 

அப்பொழுது கர்த்தர் தன் ஊழியக்காரனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்து, தன்னுடைய மந்திரிகளாகிய கப்ரியேல், மீக்காயேல், ராஃபேல், உரியேல் என்போருக்கு இயேசுவைப் பூலோகத்திலிருந்து புறமே எடுத்து விடும்படிக்குக் கட்டளையிட்டார்.

 

தெற்குப் பக்கமாக திறந்திருக்கும் சாளரம் வழியாக இயேசுவை தேவ ஊழியர்கள் வெளியே எடுத்தார்கள். அவரையும் கொண்டு அவர்கள் கர்த்தரின் அருள் என்றைக்கும் நிலைத்து நிற்கும் தேவ ஊழியக்காரர்கள் தங்கியிருக்கும் மூன்றாவது வானத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

 

216.இயேசு எடுக்கப்பட்ட உடனே யூதாஸ் மற்றவர்கள் முன்னிலையில் அறைக்குள் சாடிச்சென்றான். அப்போது எல்லா அப்போஸ்தலர்களும் நித்திரை கொண்டிருந்தனர். அப்பொழுது அற்புதங்களை உடைய கர்த்தர் அற்புதத்தை நிகழ்த்தினார்! யூதாசின் உரையாடலும் அவனது முகமும் இயேசுவினுடையது போல ஆயிற்று! நாங்கள் அனைவரும் அவன் இயேசுவென்று நினைக்கும் நிலைக்கு ஆகிவிட்டது! எங்களை எழுப்பி அவன் குரு எங்கே என்று தேடினான். அப்பொழுது நாங்கள் வியப்புடன் அவனுக்குப் பதில் கூறினோம் ஆண்டவரே! தாங்கள் தானே எங்களுக்குக் குருவானவர், இப்போது எங்களை மறந்து விட்டீர்களா? அவன் புன்னகைத்துக் கொண்டு கூறினான்: நான்தான் யூதாஸ் இஸ்காரியாத், இதனைப் புரியாத நீங்கள் இப்போது அறிவீனர்களே!"

 

இப்படிக் கூறிக் கொண்டிருக்கையில் படையாட்கள் உள்ளே நுழைந்தனர். முற்றிலும் இயேசுவைப் போல மாறி விட்டிருந்த யூதாசைப் பிடித்துக் கொண்டார்கள். எங்களைச் சுற்றியிருந்த படையாட்களுக்கு இடையில் நாங்கள் ஓடுகையில் யூதாஸ் கூறிக் கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். நார்ப்பட்டுத் துணியால் தன்னைப் போர்த்தியிருந்த யோவான் எழுந்து ஓடியபோது ஒரு படையாள் நார்ப்பட்டுத் துணியைப் பிடித்தபோது, அவர் அதை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்! இயேசுவின் வேண்டுதலுக்கு கர்த்தர் செவிகொடுத்து, பதினொன்று பேரும் தீமையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.

 

217. படையாட்கள் யூதாசைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தனர். அவனோ தான் இயேசு அல்ல என்று மறுத்துக் கொண்டிருந்தான். படையாட்கள் அவனைப் பரிகசித்துக் கொண்டு சொன்னார்கள், ஐயா, தாங்கள் பயப்பட வேண்டாம், தங்களை இஸ்ரவேலரின் மன்னராக ஆக்குவதற்கு நாங்கள் வந்திருக்கிறோம். அரசாட்சியை தாங்கள் மறுப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் தான் உங்களைப் பிடித்து வைத்துள்ளோம்!"

 

இப்போது நீங்கள் உங்கள் மதியை இழந்து விட்டீர்கள். நீங்கள் ஒரு திருடனைப் (பிடிப்பது) போல் நாஸரேத்துடைய இயேசுவைப் பிடிப்பதற்காக ஆயுதங்கள் மற்றும் விளக்குகளுடன் வந்துள்ளீர்கள். உங்களுக்கு வழிகாட்டிய என்னையே அரசனாக்குவதற்காக நீங்கள் பிடித்து வைத்துள்ளீர்கள் என்று யூதாஸ் பதிலளித்தான்.

 

சம்பவம் நடக்கும்போது நேரடி சாட்சியாக இருந்த பர்னபா தரும் இந்த வாக்குமூலம் குர்ஆன் கூறும் கருத்துடன் அப்படியே ஒத்துப் போகிறது.

 

இயேசு பிடிபடுவதற்கு முன்னர் கர்த்தரிடம் அழுது அழுது முறையிட்டுள்ளார்.

 

அவரது முறையீடு இது தான்:

 

அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம் பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும், செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக் கொண்டு போய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது, அவர் என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று அப்புறம் போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார். பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரை பண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடே கூட விழித்திருக்கக் கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளது தான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்;. அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம் பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக் கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார். அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரை பண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரை மயக்கம் அடைந்திருந்தது. அவர் மறுபடியும் அவர்களை விட்டுப் போய், மூன்றாந் தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி, ஜெபம் பண்ணினார்

மத்தேயு 26:36-44

 

பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக் கொண்டு போய் துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி சற்று அப்புறம் போய் முகங்குப்புற விழுந்து: என் பிதாவே இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது என்று ஜெபம் பண்ணினார்.

மத்தேயு 26:37-39

 

மற்ற சுவிசேஷங்களும் கூட இதே போல் கூறுகின்றன.

 

இயேசு மரண பயத்துடன் தன்னைக் காப்பாற்றுமாறு அழுது அழுது கெஞ்சி மன்றாடி இருக்கும்போது கர்த்தர் அவர் வேண்டுகோளை ஏற்று காப்பாற்றாமல் இருக்க மாட்டார் என்பது தான் பொருத்தமாக உள்ளது.

 

மேலும் அனைவரின் பாவங்களைச் சுமக்க இயேசு பலியானார் என்பதும் பைபிளுக்கு முரணான கொள்கையாகும்.

 

பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்பட வேண்டாம், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்பட வேண்டும்"

உபாகமம் : 24:16

 

பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை. தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை. நீதிமானுடைய நீதி அவன் மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன் மேல் தான் இருக்கும்"

எசேக்கியேல் 18:20

 

பிதாக்கள் திராட்சக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப் போயின என்று அந்நாட்களில் சொல்ல மாட்டார்கள், அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான். எந்த மனுஷன் திராட்சக் காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப் போகும்"

எரேமியா 31:29,30

 

ஒவ்வொருவரும் தத்தமது பாவங்களைத் தாமே சுமக்க வேண்டும் என்று பைபிள் கூறும்போது மற்றவர்களின் பாவத்தைச் சுமக்க இயேசு பலியானர் என்பது பைபிளையே மறுப்பதாக உள்ளது. மேலும் இயேசு சாவதற்கு விரும்பவில்லை; தப்பிக்கவே விரும்பினார் என்பது அவரது மேற்கண்ட பிரார்த்தனையில் இருந்து தெரியமுடிகிறது.

 

மேலும் அவர் தானாகப் பலியாகவில்லை; எப்படியாவது தப்பித்து ஓடவே முயன்றார். இதனால் தான் அவரது சீடனே காட்டிக் கொடுத்தான்.

 

இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள்.

மத்தேயு 26:5

 

அப்பொழுது, பரிசேயர் வெளியே போய், அவரைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனை பண்ணினார்கள்.

மத்தேயு-12:14

 

இரண்டு நாளைக்குப் பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்கா பண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலை செய்யும்படி வகை தேடினார்கள்.

மாற்கு-14:1

அப்பொழுது பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் அவரைக் கொலை செய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச் செய்யலாமென்று வகை தேடினார்கள்.

லூக்கா-22:2

அவரைக் காட்டிக் கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான் அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான். அவன் வந்தவுடனே அவரண்டையில் சேர்ந்து: ரபீ ரபீ என்று சொல்லி அவரை முத்தஞ்செய்தான். அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு அவரைப் பிடித்தார்கள்.

மாற்கு 14:44-46

 

மனிதர்களின் பாவங்களைச் சுமப்பதற்காக இயேசு தன்னைத் தானே பலி கொடுத்தார் என்பது உண்மையாக இருந்தால் அவர் தானாக தன்னைச் சிலுவையில் அறைந்திருக்க வேண்டும். அல்லது அவரது எதிரிகள் அவரைச் சிலுவையில் அறைந்து கொல்ல முடிவு செய்திருப்பதைக் கேள்விப்பட்டு அதை வரவேற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர் ஓடி ஒளிந்திருக்கிறார். இதனால் தான் அவரது சீடர்களில் ஒருவரே அவரைக் காட்டிக் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. ஓடி ஒளிந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்பவரைத்தான் காட்டிக் கொடுக்கும் அவசியம் ஏற்படும்.

 

எனவே பைபிளின் கருத்துப்படி இயேசு மற்றவர்களின் பாவத்தைச் சுமக்க விரும்பி தானாகப் பலியாகவில்லை என்பது உறுதியாகத் தெரிகின்றது.

 

மேலும் விபரம் அறிய 101, 166வது குறிப்பையும் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 45161