24. கொலையாளியைக் கண்டறிய மாட்டை அறுத்தல்

 

2:67 முதல் 2:73 வரை உள்ள வசனங்களில் இறைவன் ஒரு மாட்டை அறுக்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது.

 

மூஸா நபியவர்களின் காலத்தில் ஒருவர் கொல்லப்படுகிறார். கொலை செய்தவர் யார் என்பது தெரியவில்லை. கொலையாளியைக் கண்டுபிடித்துத் தருமாறு மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டனர். ஒரு மாட்டை அறுத்து, கொல்லப்பட்டவனின் மீது அடித்தால் இறந்தவன் உயிர் பெற்று தன்னைக் கொன்றவனை அடையாளம் காட்டுவான் என்று இறைவன் சொன்னான்.

 

ஏதாவது ஒரு மாட்டை அவர்கள் அறுத்திருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு அவர்கள் தமக்குத் தாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இந்நிகழ்ச்சியின் காரணமாகத்தான் இந்த அத்தியாயத்திற்கு 'அந்த மாடு' என்று பெயர் வந்தது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 47655