139. பொருள் திரட்டுதல் பாவ காரியம் அல்ல!

 

இவ்வசனம் (9:34) பொருளாதாரத்தைச் சேமித்து வைத்துக் கொள்வதை குற்றம் எனக் கூறுவதாக கருதக் கூடாது.

 

ஏனெனில் திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்கள் பொருளாதாரத்தைத் திரட்டவும், சேமிக்கவும் தூண்டுகின்றன. இதை 4:29, 4:32, 4:34, 9:103, 16:71, 17:6, 33:27, 62:10, 71:12, 73:20 ஆகிய வசனங்களில் காணலாம்.

 

இவ்வசனத்தில் பொருளாதாரத்தைத் திரட்டுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

 

ஆயினும் இவ்வசனம் ஸகாத் எனும் தர்மம் கடமையாக்கப்படுவதற்கு முன்பிருந்த நிலையெனவும், ஸகாத் கடமையாக்கப்பட்ட பின் பொருளாதாரத்தைத் திரட்டுவோர் அதற்குரிய ஸகாத்தைக் கொடுத்து விட்டால் அவர்கள் மீது மறுமையில் எந்தக் குற்றமும் இல்லை என்றும் நபிவழித் தொகுப்புகளில் கூறப்படுகிறது. (பார்க்க: புகாரி 1404)

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 44743