44.   அத்துகான்

அந்தப் புகை

மொத்த வசனங்கள் : 59

பத்தாவது வசனத்தில் புகை மூட்டம் பற்றிய ஓர் எச்சரிக்கை இடம் பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

44:1   حٰمٓ ‌ ۛ‌ۚ‏ 
44:1. ஹா, மீம்.2
44:2   وَالْكِتٰبِ الْمُبِيْنِ ‌ ۛ‌ۙ‏ 
44:2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!379
44:3   اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ‌ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ‏ 
44:3. இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம்.341
44:4   فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍۙ‏ 
44:4. அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.
44:5   اَمْرًا مِّنْ عِنْدِنَا‌ؕ اِنَّا كُنَّا مُرْسِلِيْنَ‌ۚ‏ 
44:6   رَحْمَةً مِّنْ رَّبِّكَ‌ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُۙ‏ 
44:5, 6. (இது) நமது கட்டளை. உமது இறைவனின் அருளாக நாம் தூதர்களை அனுப்புவோராக இருந்தோம். அவன் செவியுறுபவன்;488 அறிந்தவன்.26
44:7   رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا‌ۘ اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ‏ 
44:7. அவன் வானங்கள்,507 பூமி மற்றும் அவற்றுக்கு இடையே உள்ளவற்றின் இறைவன். உறுதியாக நம்புவோராக நீங்கள் இருந்தால் (இதை அறிந்து கொள்ளுங்கள்!)
44:8   لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ يُحْىٖ وَيُمِيْتُ‌ؕ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآٮِٕكُمُ الْاَوَّلِيْنَ‏ 
44:8. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். (அவன்) உங்கள் இறைவனும், முந்தைய உங்கள் முன்னோர்களின் இறைவனுமாவான்.
44:9   بَلْ هُمْ فِىْ شَكٍّ يَّلْعَبُوْنَ‏ 
44:9. எனினும் அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
44:10   فَارْتَقِبْ يَوْمَ تَاْتِى السَّمَآءُ بِدُخَانٍ مُّبِيْنٍۙ‏ 
44:10. வானம்507 தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை1 எதிர்பார்ப்பீராக!
44:11   يَغْشَى النَّاسَ‌ؕ هٰذَا عَذَابٌ اَلِيْمٌ‏ 
44:11. அது மக்களை மூடிக் கொள்ளும். இதுவே துன்புறுத்தும் வேதனை.
44:12   رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ اِنَّا مُؤْمِنُوْنَ‏ 
44:12. "எங்கள் இறைவா! எங்களை விட்டும் வேதனையை நீக்குவாயாக! நாங்கள் நம்பிக்கை கொள்பவர்கள்'' (என்று கூறுவார்கள்)
44:13   اَنّٰى لَهُمُ الذِّكْرٰى وَقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مُّبِيْنٌۙ‏ 
44:13. அறிவுரை அவர்களுக்கு எவ்வாறு (பயனளிக்கும்?) அவர்களிடம் தெளிவுபடுத்தும் தூதர் வந்துள்ளார்.
44:14   ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوْا مُعَلَّمٌ مَّجْنُوْنٌ‌ۘ‏ 
44:14. பின்னர் அவரை அவர்கள் அலட்சியம் செய்தனர். "பிறரால் கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்''468 என்றும் கூறினர்.
44:15   اِنَّا كَاشِفُوا الْعَذَابِ قَلِيْلًا اِنَّكُمْ عَآٮِٕدُوْنَ‌ۘ‏ 
44:15. வேதனையைச் சிறிது (நேரம்) நாம் நீக்குவோம். நீங்கள் (பழைய நிலைக்கு) திரும்புவீர்கள்.
44:16   يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْـرٰى‌ۚ اِنَّا مُنْتَقِمُوْنَ‏ 
44:16. மிகக் கடுமையான பிடியாக நாம் பிடிக்கும் நாளில்1 தண்டிப்போம்.
44:17   وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَ جَآءَهُمْ رَسُوْلٌ كَرِيْمٌۙ‏ 
44:17. அவர்களுக்கு முன் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைச் சோதித்துள்ளோம்.484 அவர்களிடம் மரியாதைக்குரிய தூதர் வந்தார்.
44:18   اَنْ اَدُّوْۤا اِلَىَّ عِبَادَ اللّٰهِ‌ؕ اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ‏ 
44:18. அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படையுங்கள்!181 நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதராவேன்.
44:19   وَّاَنْ لَّا تَعْلُوْا عَلَى اللّٰهِ‌ۚ اِنِّىْۤ اٰتِيْكُمْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ‌ۚ‏ 
44:19. அல்லாஹ்வுக்கு எதிராக ஆணவம் கொள்ளாதீர்கள்! நான் உங்களிடம் தெளிவான சான்றைக் கொண்டு வருபவன்.
44:20   وَاِنِّىْ عُذْتُ بِرَبِّىْ وَرَبِّكُمْ اَنْ تَرْجُمُوْنِ ۚ‏ 
44:20. என்னை நீங்கள் கல் எறிந்து கொல்வதை விட்டும் உங்களுக்கும் இறைவனாகிய என் இறைவனிடம் காவல் தேடுகிறேன்.
44:21   وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِىْ فَاعْتَزِلُوْنِ‏ 
44:21. "என்னை நீங்கள் நம்பாவிட்டால் என்னை விட்டு விலகி விடுங்கள்!'' (என்றார்.)
44:22   فَدَعَا رَبَّهٗۤ اَنَّ هٰۤؤُلَاۤءِ قَوْمٌ مُّجْرِمُوْنَ‏‏ 
44:22. "அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவே உள்ளனர்'' என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்தார்.
44:23   فَاَسْرِ بِعِبَادِىْ لَيْلًا اِنَّكُمْ مُّتَّبَعُوْنَۙ‏ 
44:24   وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا‌ؕ اِنَّهُمْ جُنْدٌ مُّغْرَقُوْنَ‏ 
44:23, 24. "எனது அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் எதிரிகளால் பின்தொடரப்படுவீர்கள். பிளக்கப்பட்ட நிலையில் கடலை விட்டு விடுவீராக! அவர்கள் மூழ்கடிக்கப்படும் படையினராவர் (என்று இறைவன் கூறினான்.)''26
44:25   كَمْ تَرَكُوْا مِنْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ‏ 
44:26   وَّزُرُوْعٍ وَّمَقَامٍ كَرِيْمٍۙ‏ 
44:27   وَّنَعْمَةٍ كَانُوْا فِيْهَا فٰكِهِيْنَۙ‏ 
44:25, 26, 27. அவர்கள் எத்தனையோ சோலைகளையும், ஊற்றுகளையும், பயிர்களையும், மதிப்புமிக்க இடங்களையும், அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த சொகுசுகளையும் விட்டுச் சென்றனர்.26
44:28   كَذٰلِكَ‌ وَاَوْرَثْنٰهَا قَوْمًا اٰخَرِيْنَ‏ 
44:28. இப்படித்தான்! வேறு சமுதாயத்தினரை அதற்கு உரிமையாளர்களாக ஆக்கினோம்.
44:29   فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَآءُ وَالْاَرْضُ وَمَا كَانُوْا مُنْظَرِيْنَ‏ 
44:29. அவர்களுக்காக வானமும்,507 பூமியும் அழவில்லை. அவர்கள் அவகாசம் கொடுக்கப்படவும் இல்லை.
44:30   وَلَقَدْ نَجَّيْنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ مِنَ الْعَذَابِ الْمُهِيْنِۙ‏ 
44:31   مِنْ فِرْعَوْنَ‌ؕ اِنَّهٗ كَانَ عَالِيًا مِّنَ الْمُسْرِفِيْنَ‏ 
44:30, 31. இஸ்ராயீலின் மக்களை ஃபிர்அவ்னின் இழிவு தரும் வேதனையிலிருந்து காப்பாற்றினோம். அவன் ஆணவம் கொண்டு வரம்பு மீறியவனாக இருந்தான்.26
44:32   وَلَقَدِ اخْتَرْنٰهُمْ عَلٰى عِلْمٍ عَلَى الْعٰلَمِيْنَ‌ۚ‏ 
44:32. அகிலத்தாரை விட அவர்களை அறிந்தே தேர்வு செய்தோம்.16
44:33   وَاٰتَيْنٰهُمْ مِّنَ الْاٰيٰتِ مَا فِيْهِ بَلٰٓؤٌا مُّبِيْنٌ‏ 
44:33. எதில் தெளிவான சோதனை484 உள்ளதோ அத்தகைய சான்றுகளை அவர்களுக்கு வழங்கினோம்.
44:34   اِنَّ هٰٓؤُلَاۤءِ لَيَقُوْلُوْنَۙ‏ 
44:35   اِنْ هِىَ اِلَّا مَوْتَتُنَا الْاُوْلٰى وَمَا نَحْنُ بِمُنْشَرِيْنَ‏ 
44:36   فَاْتُوْا بِاٰبَآٮِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏ 
44:34, 35, 36. "முதல் தடவை மரணிப்பது தவிர வேறு இல்லை. நாங்கள் எழுப்பப்படுவோராக இல்லை; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் முன்னோர்களைக் கொண்டு வாருங்கள்!'' என்று அவர்கள் கேட்கின்றனர்.26
44:37   اَهُمْ خَيْرٌ اَمْ قَوْمُ تُبَّعٍۙ وَّ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ اَهْلَكْنٰهُمْ‌ اِنَّهُمْ كَانُوْا مُجْرِمِيْنَ‏ 
44:37. இவர்கள் சிறந்தவர்களா? அல்லது "துப்பஃ' என்ற சமுதாயத்தினரா? இவர்களுக்கு முன் சென்றவர்களை நாம் அழித்து விட்டோம். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவே இருந்தனர்.
44:38   وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ‏ 
44:38. வானங்களையும்,507 பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
44:39   مَا خَلَقْنٰهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏ 
44:39. தக்க காரணத்துடன் தவிர அவ்விரண்டையும் நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
44:40   اِنَّ يَوْمَ الْفَصْلِ مِيْقَاتُهُمْ اَجْمَعِيْنَۙ‏ 
44:40. தீர்ப்பு நாள்1 தான் அவர்கள் அனைவருக்கும் (எச்சரிக்கப்பட்ட) நேரம்.
44:41   يَوْمَ لَا يُغْنِىْ مَوْلًى عَنْ مَّوْلًى شَيْــًٔا وَّلَا هُمْ يُنْصَرُوْنَۙ‏ 
44:42   اِلَّا مَنْ رَّحِمَ اللّٰهُ‌ؕ اِنَّهٗ هُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏ 
44:41, 42. அந்நாளில் எந்த நண்பனும் எந்த நண்பனுக்கும் எந்த ஒன்றையும் பயனளிக்க மாட்டான். அல்லாஹ் அருள் புரிந்தவரைத் தவிர அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். அவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.26
44:43   اِنَّ شَجَرَتَ الزَّقُّوْمِۙ‏ 
44:44   طَعَامُ الْاَثِيْمِ ۛۚ   ۖ‏ 
44:43, 44. ஸக்கூம் எனும் மரம் குற்றவாளியின் உணவாகும்.26
44:45   كَالْمُهْلِ ۛۚ يَغْلِىْ فِى الْبُطُوْنِۙ‏ 
44:46   كَغَلْىِ الْحَمِيْمِ‏ 
44:45, 46. உருக்கிய செம்பைப் போலும், சூடேற்றப்பட்ட நீர் கொதிப்பதைப் போலும் வயிறுகளில் அது கொதிக்கும்.26
44:47   خُذُوْهُ فَاعْتِلُوْهُ اِلٰى سَوَآءِ الْجَحِيْمِ   ۖ‏ 
44:47. "அவனைப் பிடியுங்கள்! அவனை நரகத்தின் மையத்திற்குக் கொண்டு வாருங்கள்!'' (என வானவர்களிடம் கூறப்படும்.)
44:48   ثُمَّ صُبُّوْا فَوْقَ رَاْسِهٖ مِنْ عَذَابِ الْحَمِيْمِؕ‏ 
44:48. பின்னர் அவன் தலை மீது வதைக்கும் கொதி நீரை ஊற்றுங்கள்!
44:49   ذُقْ ۖۚ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْكَرِيْمُ‏ 
44:50   اِنَّ هٰذَا مَا كُنْتُمْ بِهٖ تَمْتَرُوْنَ‏ 
44:49, 50. சுவைத்துப்பார்! நீ மிகைத்தவன்; மரியாதைக்குரியவன். நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தது இதுவே (என்றும் கூறப்படும்.)
44:51   اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ مَقَامٍ اَمِيْنٍۙ‏ 
44:52   فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍ ۙ ۚ‏ 
44:51, 52. (இறைவனை) அஞ்சியோர் பாதுகாப்பான இடத்திலும், சொர்க்கச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள்.26
44:53   يَّلْبَسُوْنَ مِنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَقٰبِلِيْنَۚ ۙ‏ 
44:53. ஸுன்துஸ், இஸ்தப்ரக் எனும் (இரு வகையான) பட்டாடை அணிந்து ஒருவரையொருவர் சந்திப்பார்கள்.
44:54   كَذٰلِكَ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِيْنٍؕ‏ 
44:54. இப்படித்தான்! அவர்களுக்கு ஹூருல் ஈன்களைத் துணைகளாக்குவோம்.8
44:55   يَدْعُوْنَ فِيْهَا بِكُلِّ فَاكِهَةٍ اٰمِنِيْنَۙ‏ 
44:55. அச்சமின்றி ஒவ்வொரு கனியையும் அவர்கள் அங்கே கேட்பார்கள்.
44:56   لَا يَذُوْقُوْنَ فِيْهَا الْمَوْتَ اِلَّا الْمَوْتَةَ الْاُوْلٰى‌ ۚ وَوَقٰٮهُمْ عَذَابَ الْجَحِيْمِۙ‏ 
44:56. முதலில் அடைந்த மரணத்தைத் தவிர அங்கே மரணத்தைச் சுவைக்க மாட்டார்கள். நரக வேதனையிலிருந்து அவர்களை அவன் காப்பான்.
44:57   فَضْلًا مِّنْ رَّبِّكَ ‌ؕ ذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ‏ 
44:57. (இது) உமது இறைவனின் அருட்கொடை. இதுவே மகத்தான வெற்றி.
44:58   فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏ 
44:58. (முஹம்மதே!) அவர்கள் படிப்பினை பெறவே இதை உமது மொழியில்244 எளிதாக்கியுள்ளோம்.
44:59   فَارْتَقِبْ اِنَّهُمْ مُّرْتَقِبُوْنَ‏ 
44:59. நீர் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்ப்பவர்கள்.

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 44658