56.   அல் வாகிஆ

அந்த நிகழ்ச்சி

மொத்த வசனங்கள் : 96

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் வாகிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்துக்குப் பெயராக ஆக்கப்பட்டது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

56:1   اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ۙ‏ 
56:2   لَيْسَ لِـوَقْعَتِهَا كَاذِبَةٌ‌ ۘ‏ 
56:3   خَافِضَةٌ رَّافِعَةٌ ۙ‏ 
56:1, 2, 3. அந்த நிகழ்ச்சி1 நடக்கும்போது, அது நிகழ்வதைத் தடுப்பதோ, (அதைத்) தாமதப்படுத்துவதோ, முற்படுத்துவதோ எதுவுமில்லை.26
56:4   اِذَا رُجَّتِ الْاَرْضُ رَجًّا ۙ‏ 
56:5   وَّبُسَّتِ الْجِبَالُ بَسًّا ۙ‏ 
56:6   فَكَانَتْ هَبَآءً مُّنْۢبَـثًّا ۙ‏ 
56:4, 5, 6. பூமி ஒரேயடியாக அசைக்கப்படும்போது, மலைகள் தூள் தூளாக்கப்படும்போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும்.26
56:7   وَّكُنْـتُمْ اَزْوَاجًا ثَلٰـثَـةً ؕ‏ 
56:7. நீங்கள் மூன்று பிரிவினராக ஆவீர்கள்.
56:8   فَاَصْحٰبُ الْمَيْمَنَةِ ۙ مَاۤ اَصْحٰبُ الْمَيْمَنَةِ ؕ‏ 
56:8. (முதல் வகையினர்) வலப்புறத்திலிருப்போர். வலப்புறத்தில் இருப்போர் என்றால் என்ன?
56:9   وَاَصْحٰبُ الْمَشْـَٔـمَةِ ۙ مَاۤ اَصْحٰبُ الْمَشْـَٔـمَةِؕ‏ 
56:9. (இரண்டாம் வகையினர்) இடது புறத்தில் இருப்பவர்கள். இடது புறத்தில் இருப்போர் என்றால் என்ன?
56:10   وَالسّٰبِقُوْنَ السّٰبِقُوْنَۚ  ۙ‏ 
56:10. (மூன்றாவது வகையினர்) முந்தியோர். (தகுதியிலும்) முந்தியோரே.
56:11   اُولٰٓٮِٕكَ الْمُقَرَّبُوْنَ‌ۚ‏ 
56:11. அவர்களே (இறைவனுக்கு) நெருக்கமானோர்.
56:12   فِىْ جَنّٰتِ النَّعِيْمِ‏ 
56:12. இன்பமான சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்.
56:13   ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِيْنَۙ‏ 
56:14   وَقَلِيْلٌ مِّنَ الْاٰخِرِيْنَؕ‏ 
56:15   عَلٰى سُرُرٍ مَّوْضُوْنَةٍۙ‏ 
56:13, 14, 15. முதல் வகையினரில் (வலப்புறத்தார்) ஒரு தொகையினரும், கடைசி வகையினரில் சிறு தொகையினரும் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களில் இருப்பார்கள்.26
56:16   مُّتَّكِـــِٕيْنَ عَلَيْهَا مُتَقٰبِلِيْنَ‏ 
56:16. ஒருவரையொருவர் எதிர்நோக்கி அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
56:17   يَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَۙ‏ 
56:18   بِاَكْوَابٍ وَّاَبَارِيْقَ ۙ وَكَاْسٍ مِّنْ مَّعِيْنٍۙ‏ 
56:17, 18. இளமை மாறாத சிறுவர்கள் மது ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட குவளையுடனும், கிண்ணங்களுடனும், கெண்டிகளுடனும் அவர்களைச் சுற்றி வருவார்கள்.26
56:19   لَّا يُصَدَّعُوْنَ عَنْهَا وَلَا يُنْزِفُوْنَۙ‏ 
56:19. அதனால் அவர்களுக்குத் தலைவலி வராது. போதை மயக்கத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.
56:20   وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُوْنَۙ‏ 
56:21   وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُوْنَؕ‏ 
56:20, 21. அவர்கள் விரும்புகிற கனிகளுடனும், அவர்கள் ஆசைப்படும் பறவைகளின் மாமிசத்துடனும் (அச்சிறுவர்கள் சுற்றி வருவார்கள்.)26
56:22   وَحُوْرٌ عِيْنٌۙ‏ 
56:23   كَاَمْثَالِ اللُّـؤْلُـوٴِالْمَكْنُوْنِ‌ۚ‏ 
56:22, 23. ஹூருல் ஈன்களும்8 மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.26
56:24   جَزَآءًۢ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ 
56:24. அவர்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததற்கு இது கூலியாகும்
56:25   لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَغْوًا وَّلَا تَاْثِيْمًا ۙ‏ 
56:25. அங்கே வீணானதையோ, பாவமான சொல்லையோ செவியுற மாட்டார்கள்
56:26   اِلَّا قِيْلًا سَلٰمًا سَلٰمًا‏ 
56:26. ஸலாம் ஸலாம்159 என்ற சொல்லைத் தவிர.
56:27   وَاَصْحٰبُ الْيَمِيْنِ ۙ مَاۤ اَصْحٰبُ الْيَمِيْنِؕ‏ 
56:27. (அடுத்தது) வலது புறத்தில் இருப்பவர்கள்! வலது புறத்தில் இருப்போர் என்பது என்ன?
56:28   فِىْ سِدْرٍ مَّخْضُوْدٍۙ‏ 
56:29   وَّطَلْحٍ مَّنْضُوْدٍۙ‏ 
56:30   وَّظِلٍّ مَّمْدُوْدٍۙ‏ 
56:31   وَّ مَآءٍ مَّسْكُوْبٍۙ‏ 
56:32   وَّفَاكِهَةٍ كَثِيْرَةٍۙ‏ 
56:33   لَّا مَقْطُوْعَةٍ وَّلَا مَمْنُوْعَةٍۙ‏ 
56:34   وَّ فُرُشٍ مَّرْفُوْعَةٍؕ‏ 
56:28, 29, 30, 31, 32, 33, 34. அவர்கள் முள் இல்லாத இலந்தை மரத்தினடியிலும், குலைகள் தொங்கும் வாழை மரத்தினடியிலும், நீண்ட நிழல்களின் அடியிலும், ஓட்டிவிடப்படும் தண்ணீருக்கு அருகிலும், தடுக்கப்படாத, தீர்ந்து போகாத, ஏராளமான கனிகளுக்கு அருகிலும் உயரமான விரிப்புகளின் மீதும் இருப்பார்கள்.26
56:35   اِنَّاۤ اَنْشَاْنٰهُنَّ اِنْشَآءًۙ‏ 
56:35. அப்பெண்களை (ஹூருல் ஈன்களை) நாமே அழகுறப் படைத்தோம்.
56:36   فَجَعَلْنٰهُنَّ اَبْكَارًاۙ‏ 
56:37   عُرُبًا اَتْرَابًاۙ‏ 
56:36, 37. அவர்களைக் கன்னியராகவும்,8 ஒத்த வயதினராகவும், நேசம் மிக்கோராகவும் ஆக்கினோம்.26
56:38   لِّاَصْحٰبِ الْيَمِيْنِؕ‏ 
56:39   ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِيْنَۙ‏ 
56:40   وَثُلَّةٌ مِّنَ الْاٰخِرِيْنَؕ‏ 
56:38, 39, 40. இது முதல் வகையினரில் ஒரு தொகையினரும், கடைசி வகையினரில் ஒரு தொகையினரும் ஆகிய வலது புறத்தில் இருப்போருக்கு உரியது.26
56:41   وَاَصْحٰبُ الشِّمَالِ ۙ مَاۤ اَصْحٰبُ الشِّمَالِؕ‏ 
56:41. (அடுத்த சாரார்) இடது புறத்தில் இருப்பவர்கள்! இடது புறத்தில் இருப்போர் என்பது என்ன?
56:42   فِىْ سَمُوْمٍ وَّحَمِيْمٍۙ‏ 
56:43   وَّظِلٍّ مِّنْ يَّحْمُوْمٍۙ‏ 
56:42, 43. அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள்.26
56:44   لَّا بَارِدٍ وَّلَا كَرِيْمٍ‏ 
56:44. அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை.
56:45   اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰ لِكَ مُتْرَفِيْنَۚ  ۖ‏ 
56:45. இதற்கு முன் அவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.
56:46   وَكَانُوْا يُصِرُّوْنَ عَلَى الْحِنْثِ الْعَظِيْمِ‌ۚ‏ 
56:46. பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர்.
56:47   وَكَانُوْا يَقُوْلُوْنَ ۙ اَٮِٕذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَۙ‏ 
56:48   اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَ‏ 
56:47, 48. "நாங்களும் முந்தைய எங்களின் முன்னோர்களும் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும்போது உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.26
56:49   قُلْ اِنَّ الْاَوَّلِيْنَ وَالْاٰخِرِيْنَۙ‏ 
56:50   لَمَجْمُوْعُوْنَ ۙ اِلٰى مِيْقَاتِ يَوْمٍ مَّعْلُوْمٍ‏ 
56:49, 50. "முந்தையவர்களும், பிந்தையவர்களும் அறியப்பட்ட ஒரு நாளின்1 குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று திரட்டப்படுவார்கள்'' என்று கூறுவீராக!26
56:51   ثُمَّ اِنَّكُمْ اَيُّهَا الضَّآلُّوْنَ الْمُكَذِّبُوْنَۙ‏ 
56:52   لَاٰكِلُوْنَ مِنْ شَجَرٍ مِّنْ زَقُّوْمٍۙ‏ 
56:51, 52. பொய்யெனக் கருதிக் கொண்டு வழிகேட்டில் இருந்தவர்களே! பின்னர், நீங்கள் ஸக்கூம் எனும் மரத்திலிருந்து உண்பீர்கள்.26
56:53   فَمٰلِــُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَ‌ۚ‏ 
56:53. அதனால் வயிறுகளை நிரப்புவீர்கள்.
56:54   فَشٰرِبُوْنَ عَلَيْهِ مِنَ الْحَمِيْمِ‌ۚ‏ 
56:54. அதற்கு மேல் கொதி நீரைக் குடிப்பீர்கள்.
56:55   فَشٰرِبُوْنَ شُرْبَ الْهِيْمِؕ‏ 
56:55. தாகம் கொண்ட ஒட்டகம் குடிப்பது போல் குடிப்பீர்கள்.
56:56   هٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّيْنِؕ‏ 
56:56. தீர்ப்பு நாளில் இதுவே அவர்களது விருந்து.
56:57   نَحْنُ خَلَقْنٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُوْنَ‏ 
56:57. நாமே உங்களைப் படைத்தோம். நீங்கள் நம்ப மாட்டீர்களா?
56:58   اَفَرَءَيْتُمْ مَّا تُمْنُوْنَؕ‏ 
56:58. நீங்கள் விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைச் சிந்தித்தீர்களா?
56:59   ءَاَنْتُمْ تَخْلُقُوْنَهٗۤ اَمْ نَحْنُ الْخٰلِقُوْنَ‏ 
56:59. அதை நீங்கள் படைத்தீர்களா? அல்லது நாம் படைத்தோமா?
56:60   نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَۙ‏ 
56:61   عَلٰٓى اَنْ نُّبَدِّلَ اَمْثَالَـكُمْ وَنُـنْشِئَكُمْ فِىْ مَا لَا تَعْلَمُوْنَ‏ 
56:60, 61. உங்களுக்கிடையே மரணத்தை நாமே நிர்ணயித்தோம். உங்களைப் போன்றோரை நாம் மாற்றியமைக்கவும், நீங்கள் அறியாத வகையில் உங்களைப் படைக்கவும் நாம் இயலாதோர் அல்லர்.26
>
56:62   وَلَـقَدْ عَلِمْتُمُ النَّشْاَةَ الْاُوْلٰى فَلَوْلَا تَذَكَّرُوْنَ‏ 
56:62. முதல் தடவை படைத்ததை நீங்கள் அறிந்துள்ளீர்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?
56:63   اَفَرَءَيْتُمْ مَّا تَحْرُثُوْنَؕ‏ 
56:63. நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா?
56:64   ءَاَنْتُمْ تَزْرَعُوْنَهٗۤ اَمْ نَحْنُ الزّٰرِعُوْنَ‏ 
56:64. நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?
56:65   لَوْ نَشَآءُ لَجَـعَلْنٰهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُوْنَ‏ 
56:66   اِنَّا لَمُغْرَمُوْنَۙ‏ 
56:67   بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ‏ 
56:65, 66, 67. நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். "நாம் கடன்பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப்பட்டு விட்டோம்'' என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள்.26
56:68   اَفَرَءَيْتُمُ الْمَآءَ الَّذِىْ تَشْرَبُوْنَؕ‏ 
56:68. நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா?
56:69   ءَاَنْـتُمْ اَنْزَلْـتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ‏ 
56:69. மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா?
>
56:70   لَوْ نَشَآءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْلَا تَشْكُرُوْنَ‏ 
56:70. நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா?
56:71   اَفَرَءَيْتُمُ النَّارَ الَّتِىْ تُوْرُوْنَؕ‏ 
56:71. நீங்கள் மூட்டுகிற நெருப்பைப் பற்றிச் சிந்தித்தீர்களா?
56:72   ءَاَنْتُمْ اَنْشَاْتُمْ شَجَرَتَهَاۤ اَمْ نَحْنُ الْمُنْشِـُٔـوْنَ‏ 
56:72. அதற்குரிய மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது நாம் உருவாக்கினோமா?
56:73   نَحْنُ جَعَلْنٰهَا تَذْكِرَةً وَّمَتَاعًا لِّلْمُقْوِيْنَ‌ۚ‏ 
56:73. இதனை ஒரு படிப்பினையாகவும், பயணிகளுக்குப் பலனளிப்பதாகவும் நாமே ஆக்கினோம்.
56:74   فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيْمِ‏ 
56:74. எனவே மகத்தான உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
56:75   فَلَاۤ اُقْسِمُ بِمَوٰقِعِ النُّجُوْمِۙ‏‏ 
56:75. நட்சத்திரங்கள் விழும் இடங்கள் மீது சத்தியம் செய்கிறேன்.
56:76   وَاِنَّهٗ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُوْنَ عَظِيْمٌۙ‏ 
56:76. நீங்கள் அறிந்தீர்களானால் இது மகத்தான சத்தியம்.
56:77   اِنَّهٗ لَـقُرْاٰنٌ كَرِيْمٌۙ‏ 
56:78   فِىْ كِتٰبٍ مَّكْنُوْنٍۙ‏ 
56:77, 78. இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில்157 இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும்.26
56:79   لَّا يَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَؕ‏ 
56:79. தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள்.291
56:80   تَنْزِيْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ‏ 
56:80. அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.
56:81   اَفَبِهٰذَا الْحَـدِيْثِ اَنْتُمْ مُّدْهِنُوْنَۙ‏ 
56:81. இந்தச் செய்தியையா அலட்சியம் செய்கிறீர்கள்?
56:82   وَتَجْعَلُوْنَ رِزْقَكُمْ اَنَّكُمْ تُكَذِّبُوْنَ‏ 
56:82. உங்களுக்குச் செல்வம் வழங்கியிருப்பதற்கு (நன்றியாக) பொய்யெனக் கருதுகிறீர்களா?
56:83   فَلَوْلَاۤ اِذَا بَلَغَتِ الْحُـلْقُوْمَۙ‏ 
56:84   وَاَنْتُمْ حِيْنَٮِٕذٍ تَـنْظُرُوْنَۙ‏ 
56:83, 84. அது (உயிர்) ஒருவனது தொண்டைக் குழியை அடையும்போது, அந்நேரத்தில் (அவனை) நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.26
56:85   وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْكُمْ وَلٰـكِنْ لَّا تُبْصِرُوْنَ‏ 
56:85. உங்களை விட நாமே அவனுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம்.49 எனினும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள்.
56:86   فَلَوْلَاۤ اِنْ كُنْتُمْ غَيْرَ مَدِيْنِيْنَۙ‏ 
56:87   تَرْجِعُوْنَهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏ 
56:86, 87. நீங்கள் (இம்மார்க்கத்தை) கடைப்பிடிக்காது இருந்தால், அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் அதை (உயிரை) திரும்பக் கொண்டு வரலாமே!26
56:88   فَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِيْنَۙ‏ 
56:89   فَرَوْحٌ وَّ رَيْحَانٌ ۙ وَّجَنَّتُ نَعِيْمٍ‏ 
56:88, 89. அவர் இறைவனுக்கு நெருக்கமானோரில் ஒருவராக இருந்தால், அவருக்கு உணவும், நறுமணமும், சுகமான சொர்க்கச் சோலையும் உள்ளன.26
56:90   وَاَمَّاۤ اِنْ كَانَ مِنْ اَصْحٰبِ الْيَمِيْنِۙ‏ 
56:91   فَسَلٰمٌ لَّكَ مِنْ اَصْحٰبِ الْيَمِيْنِؕ‏ 
56:90, 91. அவர் வலப்புறத்தைச் சேர்ந்தோராக இருந்தால் வலப்புறத்தாரிடமிருந்து உமக்கு ஸலாம்159!''26
56:92   وَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِيْنَ الضَّآلِّيْنَۙ‏ 
56:93   فَنُزُلٌ مِّنْ حَمِيْمٍۙ‏ 
56:94   وَّتَصْلِيَةُ جَحِيْمٍ‏ 
56:92, 93, 94. பொய்யெனக் கருதி வழிகெட்டவராக இருந்தால் கொதி நீரும், நரகில் கருகுவதும் விருந்தாகும்.26
56:95   اِنَّ هٰذَا لَهُوَ حَقُّ الْيَـقِيْنِۚ‏ 
56:95. இது உறுதியான உண்மை.
56:96   فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيْمِ‏ 
56:96. எனவே மகத்தான உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 47459