107.   அல் மாவூன்

அற்பப் பொருள்

மொத்த வசனங்கள் : 7

இந்த அத்தியாயத்தின் கடைசி வசனத்தில் அல் மாவூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

107:1   اَرَءَيْتَ الَّذِىْ يُكَذِّبُ بِالدِّيْنِؕ‏ 
107:1. தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா?
107:2   فَذٰلِكَ الَّذِىْ يَدُعُّ الْيَتِيْمَۙ‏ 
107:2. அவன் அனாதையை விரட்டுகிறான்.
107:3   وَ لَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِؕ‏ 
107:3. ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.
107:4   فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ‏ 
107:5   الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ‏ 
107:4, 5. தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான்.26
107:6   الَّذِيْنَ هُمْ يُرَآءُوْنَۙ‏ 
107:6. அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்.
107:7   وَيَمْنَعُوْنَ الْمَاعُوْنَ‏ 
107:7. அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர்.

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 47956