அச்சிடப்பட்ட திருக்குர்ஆன் பிரதிகளில் ஒவ்வொரு வசனத்தின் இறுதியில் அந்த வசனத்தின் எண்ணைக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் எழுதப்பட்ட பிரதிகளிலும், அவர்களுக்குப் பின்னர் உஸ்மான் (ரலி) அவர்களது ஆட்சியில் எழுதப்பட்ட பிரதிகளிலும் இவ்வாறு எண்கள் போடப்படவில்லை. பிற்காலத்தில் வந்தவர்கள் தான் எண்களைக் குறிப்பிட்டனர்.
...